குலு மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சல பிரதேசம் குலு மாவட்டத்தில் 23 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி வரை பருவமழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து இந்த மழையின் காரணமாக 12 மாவட்டங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும் மாநிலத்தின் நெடுஞ்சாலை பகுதிகள் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளது.

மழை கொட்டி தீர்த்து வருவதால் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முதல்வர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இத்தகைய சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் கனமழை மற்றும் சேதங்களை பொறுத்து விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது.

இதனை அடுத்து அந்த வகையில் குலு மாவட்டத்தில் 23 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி வரை பருவமழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.