இலங்கையில் ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதன் படி இன்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இம்மாதம் ஜூலை 10 ஆம் தேதி வரை நகர்ப்புற கல்வி நிலையங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் பல்வேறு சேவைகள் முடக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.