கனமழை ... உத்தரபிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

உத்தரபிரதேசம் : பள்ளிகளுக்கு விடுமுறை ... வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது. இடி மின்னலுடன் பெய்த தொடர் மழையால் மின்னல் தாக்கி கடந்த 3 நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில நிவாரண ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நேற்று மாநிலத்தின் கவுதம் புத்தா நகர் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் வெப்ப நிலையானது 10 டிகிரி வரை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக 1 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் அக்.12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.