புதுவைக்கு ஜனாதிபதி வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுவை: இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பல்வேறு பணி காரணமாக புதுவைக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் வருகிறார். எனவே இதற்காக அங்கு 1,500 காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ...வருகிற ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் புதுச்சேரிக்கு வருகிறார்.

எனவே இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு பணிகளில் 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வரும் ஜனாதிபதி திரௌபதி அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார்.


இதன் பின் தொடர்ந்து அரசு பணிகளை முடித்துக் கொண்டு நாளை மாலை 4 மணிக்கு புதுவை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட இருக்கிறார். இதன் காரணமாக புதுவையில் இன்று மற்றும் நாளை ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளிக்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.