போதை பொருள் கடத்திய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

புதுடெல்லி: ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்... ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்திய ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்றிரவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பிஎஸ்பி) தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

அதில் 6 கிலோ போதைப்பொருள் இருந்தது. இதேபோல் பஞ்சாபில் ஆளில்லா விமானம் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.