கவனயீர்ப்பு போராட்டம்... யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தினரால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டுறவு தொழிற்சங்கத்துக்கெதிராக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கொரோனா காலத்தில் இடம்பெற்ற களவுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்ற தொழிற்சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு
தெரிவித்து ஊழியர்களுக்கு எதிராக தொழிற்சங்கம் செய்யப்பட்டமைக்கும்
எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
எனினும் யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோரை தவிர ஏனைய அனைவரும்
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.