நினைவேந்தலை முன்னிட்டு நடைபயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த இளைஞர்களை பாராட்டி உள்ளார் தமிழ் ஈழ இயக்கத்தின் தலைவரும், கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் இளைஞரணியும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியும், தமிழ்மக்கள் கூட்டணியைச் சேர்ந்த இளைஞரணியும் ஒன்றாக இணைந்து தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நடைபயணத்தை மேற்கொள்வதற்காக ஒன்றாக இணைந்து யாழில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
இதுகுறித்து தமிழ் ஈழ இயக்கத்தின் தலைவரும், கூட்டமைப்பின் வன்னி மாவட்டப்
பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறியதாவது:
இளைஞர்களின் இத்தகைய செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன் என்று வெகுவாக பாராட்டியுள்ளார்.