லஞ்சம் வாங்கி சிக்கிய மாசு கட்டுப்பட்டுத அதிகாரியிடம் தீவிர விசாரணை

'கட்டுக்கட்டாக லஞ்சப்பணம் பதுக்கி வைத்து கையும் களவுமாக சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவாரூரை சேர்ந்த நிவேதா என்ற பெண், தனது அரிசி ஆலைக்கான சுற்றுச்சூழல் உரிமத்தை புதுப்பிப்பதற்காக தன்ராஜை அணுகியுள்ளார்.

அப்போது, அதனை செய்து கொடுக்க தன்ராஜ் ரூ.40 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கேட்டிருக்கிறார். இதனால் கடுப்பான நிவேதா, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய நோட்டுகளை நிவேதாவிடம் கொடுத்து அனுப்பிய அதிகாரிகள் தன்ராஜ் அந்த பணத்தை பெரும் போது கையும் களவுமாக பிடித்தனர்.