மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம்... 3 பேர் பலி

விர்ஜீனியா: அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விர்ஜீனியா பல்கலைக்கழக காவல்துறை தெரிவித்துள்ளதாவது:

இந்தத் தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என பல்கலைக்கழக நிர்வாக தலைவர் ஜிம் ரியான் தெரிவித்தார்.

சந்தேகிக்கப்படும் குற்றவாளியான அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு, தேடி வருகின்றனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.