துபாய்: விமானத்தில் பாம்பு... துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பேக்கேஜ் பெட்டியில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி737-800 ரக விமானம் கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து
புறப்பட்டது.விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக
வெளியேற்றப்பட்டனர்.
விசாரணை நடத்தி உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணைய அதிகாரி கூறியதாக பிரபல செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.