சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கொரோனா உறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்கா காந்தி அவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

எனவே இதனை தொடர்ந்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் அரசு நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் சோனியா காந்திக்கு, கடந்த 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.