இங்கு மே 13ம் தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற மே 13-ம் தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம் .... தமிழகம் முழுவதும் அடிக்கடி ரேஷன் கார்டு தொடர்பான மாற்றங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இதனை அடுத்து இதன்மூலம் நமது ரேஷன் கார்டில் உள்ள திருத்தங்களை நாம் ஒரே இடத்தில் செய்து கொள்ளலாம்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற மே 13ம் தேதி அன்று நடக்க இருக்கும் சிறப்பு ரேஷன் கார்டு முகாம் குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

நமது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் போன்ற பல திருத்தங்களை மேற்கொள்வதற்காக தாலுகா வாரியாக முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும் இது போன்ற திருத்தங்களை மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.