கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம் - சென்னை எழும்பூர் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்


கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும்

சிறப்பு ரயில் (எண்:06044), வருகிற 3ம் தேதி இரவு 8.25 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, மறு நாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.


சென்னை எழும்பூர் - எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06043), வருகிற 4-ம் தேதி மதியம் 2.10 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இதனை அடுத்து இந்த ரயில்கள், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.