தொடர் விடுமுறையின் காரணமாக சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: ஆயுத பூஜையையொட்டி4 நாட்களுக்கு சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை கிடைத்து உள்ளது. இத்தொடர் விடுமுறையின் காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க திட்டமிடுவார்கள்.

எனவே இதன் காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையையொட்டி வருகிற 24ஆம் தேதி நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதனை அடுத்து மறு மார்க்கத்தில் அக்டோபர் 25ஆம் தேதி சென்னை - நாகர்கோவில் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது.