புதிய போக்குவரத்தைத் தொடங்கும் திட்டத்தை நிராகரித்தது இலங்கை

கொழும்பு: புதிய போக்குவரத்துக்கு நிராகரிப்பு... இலங்கைக்கு தெற்கே கடல் பகுதியில் புதிய போக்குவரத்தைத் தொடங்கும் திட்டத்தை அந்நாடு நிராகரித்துள்ளது.

சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் செயல்படும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 80 வது அமர்வில் இதற்கான முன்மொழிவு பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் வடக்கு இந்தியப் பெருங்கடலில் அழிந்து வரும் நீலத்திமிங்கலகள் மீது கப்பல்கள் மோதுவது அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை தெரிவித்தது. எனவே இந்த முன்மொழிவை ஆரம்ப நிலையிலேயே நிராகரிப்பதாகத் தெரிவித்தது.