டேனியல் புயலால் தொடர் கனமழை... கிரீஸில் வெள்ளப்பெருக்கு

ஏதென்ஸ்: ‘டேனியல்’ புயல் மற்றும் கிரீஸ் நாட்டில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1930ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு அங்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல கிராமங்களில் குடியிருப்புகள் நீரில் மூழ்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வருகின்றன.