ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தகவல்

ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்... ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

5.5 முதல் 6.3-க்கு இடைப்பட்ட ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 6 கிராமங்கள் முழுவதுமாக உருக்குலைந்து விட்டதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவுமாறும் தாலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.