தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மாவட்ட வாரியாக 29 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 29 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 70 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்து 28 ஆயிரத்து 347 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:- அரியலூர் - 107 செங்கல்பட்டு - 1,239 சென்னை - 8,856 கோவை - 3,753 கடலூர் - 716 தர்மபுரி - 458 திண்டுக்கல் - 254 ஈரோடு - 807 கள்ளக்குறிச்சி - 241 காஞ்சிபுரம் - 460 கன்னியாகுமரி - 571 கரூர் - 291 கிருஷ்ணகிரி - 540 மதுரை - 606 நாகை - 361 நாமக்கல் - 703 நீலகிரி - 244 பெரம்பலூர் - 72 புதுக்கோட்டை - 215 ராமநாதபுரம் - 138 ராணிப்பேட்டை - 271 சேலம் - 1,829 சிவகங்கை - 135 தென்காசி - 125 தஞ்சாவூர் - 368 தேனி - 127 திருப்பத்தூர் - 288 திருவள்ளூர் - 1,233 திருவண்ணாமலை - 506 திருவாரூர் - 401 தூத்துக்குடி - 500 திருநெல்வேலி - 309 திருப்பூர் - 977 திருச்சி - 499 வேலூர் - 424 விழுப்புரம் - 455 விருதுநகர் - 187 விமானநிலைய கண்காணிப்பு - 2