ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 27-ந்தேதி பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே 27-ம் தேதியை பொதுவிடுமுறையாக அரசு அறிவிக்கிறது.

இதனை அடுத்து அதற்கான உத்தரவை தமிழக கவர்னர் அவர்கள் பிறப்பித்துள்ளார். 27-ம் தேதி விடுமுறை அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து பகுதியிலும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.

ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் வாக்காளர்களுக்கும் (ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும்) 27-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் போன்ற வற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.