போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு ...

நெகிழ்வுத்தன்மை அடிப்படையில் கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக்கழகங்களில் 812 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒட்டுநர் உரிமமும், நடத்துநர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என்று 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.