பாலியல் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழ் இளைஞர் கைது

தமிழ் இளைஞர் கைது... 2017ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்ற பாலியல் தாக்குதல் மற்றும், Trinity Bellwoods பகுதியில் இடம்பெற்ற இரண்டு அநாகரீகமான சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் தனியாக சென்ற பெண்களிடம் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டிருந்தார்.

இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரித்து வரும் 14 ஆவது டிவிசன் பொலிஸார், கடந்த 16ஆம் திகதி மார்க்கம் பகுதியில் அஜிதரன் ரவீந்திரன் என்ற 30 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

இவருக்கு எதிராக, பாலியல் தாக்குதல் உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன