மூன்று நாட்களாக காணாமல் போன தமிழ் இளைஞர் மீட்பு

பத்திரமாக மீட்பு... கனடாவில் மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தமிழ் இளைஞர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவில் வசிக்கும் 25 வயது இளைஞரான டிலன் நவராஜா என்பவர் கடந்த 6ஆம் திகதி காணாமல் போனார். அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு கடைசியாக நவராஜா Keele St & Fourwinds Dr பகுதியில் காணப்பட்டார்.

அவரின் உயரம் 5 அடி 8 அங்குலம் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாயமான நவராஜா தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். நவராஜாவை கண்டுபிடிக்கும் விடயத்தில் உதவிய பொதுமக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.