தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சித் தலைவர் சவுத்ரி பர்வேஷ் இலாஹி கைது

பாகிஸ்தான்: கைது செய்யப்பட்டார்... பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சித் தலைவர் சவுத்ரி பர்வேஷ் இலாஹி கைது செய்யப்பட்டார்.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பஞ்சாப் முதலமைச்சரான சவுத்ரி பர்வேஷ் இலாஹி தனது வீட்டை விட்டு வெளியேறும்போது கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இலாஹியுடன் வந்த பெண்களிடம் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

77 வயதான அவரை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து இலாஹி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.