விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்... 100வது நாளை எட்டியது

காஞ்சிபுரம்: 100வது நாளை எட்டியது... பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் இரவு போராட்டம் நேற்று இரவு 100வது நாளை எட்டியது.
சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமான நிலையம் அமைவதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் என்று கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஏகனாபுரத்தில் தொடர்ந்து நடந்து வரும் இந்த இரவு நேரப் போராட்டம் நேற்று முன்தினம் 100-வது நாளை எட்டியது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் ஒன்று கூடி மெழுகுவர்த்தியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.