முதுநிலை கல்வியியல் படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு நாளை (அக்.6) முதல் தொடக்கம்

சென்னை: விண்ணப்பபதிவு நாளை (அக்.6) முதல் தொடக்கம் ... அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் பட்டபடிப்புக்கான (B.Ed) விண்ணப்பபதிவு ஆன்லைன் வாயிலாக கடந்த செப்டம்பர் 24ம் தேதி தொடங்கியது.

இதனையடுத்து இதற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த பி.எட்., பட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை பட்டப்படிப்பை தொடர்ந்து தற்போது முதுநிலை கல்வியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் நாளை முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் தொடர்ச்சியாக தரவரிசை பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும். முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி முதல் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.