சாத்தான் குளம் விவகாரத்தில் மேலும் 5 போலீசாரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உதவி ஆய்வாளரிடம் விசாரணை... சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை கொலை தொடர்பாக, உதவி ஆய்வாளராக இருந்த பால்துரை உட்பட மேலும் 10 போலீசாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை,
மகன் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அங்கு காவல் ஆய்வாளராக இருந்த
ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட 5 பேரை ஏற்கனவே சிபிசிஐடி
போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி
அதிகாரிகள், தற்போது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த
பால்துரை, காவலர்கள் செல்லதுரை, தாமஸ் உட்பட மேலும் 10 போலீசாரிடம்
தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் இதில் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது
செய்துள்ளனர்.