ஆளுநர் இல.கணேசனை உடல்நலன் குறித்து விசாரித்தறிந்த முதல்வர்

சென்னை: ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். மேலும் ரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுநர் இல.கணேசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.