ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவு

சென்னை: ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதற்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவுகளாக நடைபெறும். இதனை அடுத்து இதில் முதற்கட்ட தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. எனவே அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதற்கட்ட தேர்வு வருகிற ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பிக்கின்றனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

எனவே விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படும்.

இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் இதுகுறித்தகூடுதல் விவரங்களை /nta.ac.in/என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் ஏதெனினும் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தகவல் தெரிவித்துள்ளது.