பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராட்டம் நடத்தவுள்ளதாக….. மத்திய அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய பென்சன் திட்டம் கொண்டு வரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி மேலும் 3% உயரும் என்று தகவல்கள் வெளியானது அதன்படி 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% அதிகரிக்கப்பட்டது.

இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு பண பலன்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாக மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 25 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம், பேரணி நடத்தவுள்ளதாக அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 27ஆம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்களும் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.