அனைத்து கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்... அரசியலமைப்பு தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தற்போது இருக்கும் அரசியலமைப்பு தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவற்றின் கருத்துக்களை கேட்டறிந்துக் கொண்டு, அரசியலமைப்பில் ஒரு மாற்றமொன்று தேவை எனில், அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

அல்லாது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால், அரசாங்கம் சுயாதீனமாகவும் இந்த விடயத்தில் செயற்படலாம். அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டாலும், அது மக்களை தான் சாரும் என்பதை மறந்துவிடக்கூடாது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.