மனைவியுடன் டில்லிக்கு சென்றுள்ள தமிழக ஆளுநர்

சென்னை: டில்லிக்கு பயணம்... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

அவர்களுடன் பாதுகாப்பு படையினரும் சென்றனர். பின்னர், அவர் நாளை இரவு 10.40 மணிக்கு புதுதில்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்புவார் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் 2 நாள் புதுடெல்லி பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் இல்லை. தனிப்பட்ட வேலை காரணமாக அவர் புதுடெல்லி அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர் தன் மனைவியுடன் சொந்த பணி காரணமாக சென்றிருக்கலாம். அரசியல் பணி ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.