இடைக்கால தடை விதித்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை: ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்றுள்ள பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரைச் சேர்த்ததற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்றுள்ள பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்