ஆறு இலட்சத்தை கடந்த பாதிப்பு... பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர் மொத்த எண்ணிக்கை ஆறு இலட்சத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் ஆறு இலட்சத்து மூன்றாயிரத்து 716பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் பிரித்தானியாவில் வைரஸ் தொற்றினால் 12ஆயிரத்து 872பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 65பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 12ஆவது நாடாக
விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 42ஆயிரத்து 825பேர்
உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 442பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.