உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடி 50 லட்சத்தை நெருங்கியது

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்தை நெருங்கியுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 53 லட்சத்து 33 ஆயிரத்து 949 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 807 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 88 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் கொரோனா காரணமாக இதுவரை 6 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.