கொரோனாவால் இலங்கையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1094 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1094 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,094 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 411 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 97 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை இன்றுமட்டும் மேலும் 14 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.