வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,734,854 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் 672,102,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 643,533,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,066 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.