உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78 மில்லியனை தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கும் மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.33 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.78 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்து இடத்தில் உள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதும், கொரோனா பரிசோதனை அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்யாவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மனித பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.