தனி விமானம் மூலம் புறப்பட்டு தமிழகம் வந்தடைந்தார் ஜனாதிபதி

நீலகிரி: தமிழகம் வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரு விமான தளத்துக்கு வந்த அவர். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மசினகுடிக்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரில் சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கி.மீ. தொலைவில் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகை தருகிறார்.

பின்னர் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணிவரை சுற்றிப் பார்க்கிறார்.

அங்கு யானைப் பாகன்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். ஆஸ்கார் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பாராட்டுகிறார்.