பிரதமர் இன்று இந்தோனேசியா பயணம்

இந்தியா: இந்தோனேசியா பயணம் .... ஜி -20 நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி நகரில் நாளை தொடங்கி 2 தினங்கள் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று பாலி நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.

உத்திரையின் போர். அதனால் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் பற்றிய உலகளாவிய சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.

அதனை அடுத்து எரிசக்தி பாதுகாப்பு, உணவு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் .

உலக பொருளாதாரம் , எரிசக்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார். மேலும் அது மட்டுமல்லாமல் ஜி 20 தலைவர்கள் சிலரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார் .