வரும் 3ம் தேதி ஊட்டி செல்கிறார் தமிழக கவர்னர்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரும் 3-ம் தேதி ஊட்டி செல்கிறார். அங்கு 1 வாரம் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

3-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவனில் தங்குகிறார்.

ொடர்ந்து 5, 6, 7 ஆகிய 3 நாட்கள் ஊட்டி ராஜ்பவனில் தங்கியிருக்கும் அவர், தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் பங்கேற்கிறார். இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்துகிறார்.

இதில் பல்வேறு துணைவேந்தர்கள் காணொலி மூலம் பங்கேற்கின்றனர். இது தவிர வேறு சில நிகழ்ச்சிகளிலும் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வரும் 9-ம் தேதி சென்னை திரும்புவார் என தெரிகிறது.