இங்கிலாந்து பிரதமரின் குழப்பமான பேச்சுக்கு எழுந்த கிண்டல்

இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையோடு சேர்த்து ஒரேடியாக குழப்பியுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து இங்கிலாந்தின் கவலைகளை இந்திய பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி தன்மன்ஜீத் சிங் தேசி, நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் கூறிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா-பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது? என்பது குறித்து எங்களுக்கு தீவிர கவலை உள்ளது. இவை இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை இருதரப்பும் பேசி தீர்வு காணவேண்டும் என்பதே நமது நிலைப்பாடு’என கூறி அவையினை ஒரேடியாக குழப்பினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேசி, பிரதமர் போரிஸ் ஜான்சனை தனது டுவிட்டர் தளத்தில் கிண்டல் செய்துள்ளார். அவரதுபதிவில் நமது பிரதமர் என்ன பேசுகிறார்? என்பதை அவர் உணர்ந்திருந்தால், நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். அய்யோ பாவம் அவரே குழம்பி போய் உள்ளார் என இணையா வாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இதற்கிடையில் விவசாயிகள் போராட்டம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறும் இங்கிலாந்து அரசு நமக்கு ஏன் வம்பு?என ஓரமாய் ஒதுங்கியுள்ளது.