ஒரே என்பது சர்வாதிகாரம்- கமல்ஹாசன் ட்வீட்

சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை தென்மாவட்டங்களில் மேற்கொண்டார். மதுரை முதல் கன்னியாகுமரி வரை அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியின் பணிகளை விமர்சனம் செய்ததுடன், மத்திய அரசையும் விமர்சித்தார். இந்நிலையில், கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளடக்கை ‘ஒரே பிரதமர்.’

எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதியும் இல்லாத ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி!

#சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல என கமல் பதிவிட்டுள்ளார்.