பறவை காய்ச்சலுக்கு சீன பெண் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: பறவை காய்ச்சலுக்கு சீன பெண் உயிரிழப்பு... உலகின் முதல் உயிரிழப்பான H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “எச்3என்8 பறவைக் காய்ச்சலுக்கு சீனப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த வகை பறவைக் காய்ச்சலால் மனிதர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறை. சீனாவில் இதுவரை 3 பேர் எச்3என்8 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூவரும் சீனாவை சேர்ந்தவர்கள்.ஆனால், இந்த காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. பாதிக்கப்பட்டவர் மற்ற தீவிர நோய்களால் இறந்தார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பறவைகள் பொதுவாக H3N8 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றன, மேலும் இந்த வகை காய்ச்சல் பறவைகள் மூலம் விலங்குகளுக்கும் பரவுகிறது.

பறவைக் காய்ச்சல் அவ்வப்போது பரவுவது சீனாவில் பொதுவானது. அங்கு, ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் பெரிய கோழி மற்றும் காட்டு பறவை இனங்களிலிருந்து தொடர்ந்து பரவுகின்றன.

முன்னதாக, 2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றது. இந்நிலையில், வுஹான் உணவு சந்தையில் உள்ள விலங்குகள் மூலம் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என மூன்றாண்டுகளுக்கு பிறகு சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.