கடன் மறு சீரமைப்பு செயல்பாடுகள் குறித்து மூன்றாவது சுற்று கலந்துரையாடல்

இலங்கை: கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்... இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 3வது சுற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

வெளிப்படையான கடன் மறுசீரமைப்பு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்புவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் தொகையை வழங்குவதில்லை என சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் தீர்மானிக்கவில்லை.

டிசம்பர் மாதத்தில் குறித்த கடன் தொகையை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே தாமதத்துக்கான காரணம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.