அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இந்த தேதி எழுத்து தேர்வு

சென்னை: வருகிற நவம்பர் 19 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு ...தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த காலியிடங்கள் எழுத்து தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கிறது. அது குறித்த அறிவிப்பை அரசு விரைவு போக்குவரத்துகழகம் வெளியிட்டு உள்ளது. இதனை அடுத்து அதில் அரசு விரைவு போக்குவரத்துகழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பட இருக்கிறது.

இப்பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் 10 மையங்களில் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான சீட்டை வருகிற நவம்பர் 13 ஆம் தேதி இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கானஅனுமதி சீட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.