லண்டன் செல்ல உள்ள 2 ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல்

2 விமானங்களுக்கு மிரட்டல்... டெல்லியிலிருந்து நாளை லண்டன் செல்ல உள்ள 2 ஏர் இந்தியா விமானங்களுக்கு மர்ம நபர் செல்போன் மூலமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து நாளை லண்டனுக்கு செல்ல தயாராக உள்ள 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலமாக அந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது தொலைபேசியில் பேசிய அந்த மர்ம நபர், டெல்லியில் இருந்து புறப்படும் இரண்டு விமானங்களும் லண்டனுக்கு சென்றடையாது என்று கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், டெல்லி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைபேசியில் பேசிய மர்ம நபர் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.