இன்றைய தினம் 10-10-2020 ஒரு அபூர்வ நாள்... தெரிந்து கொள்வோம்

இன்றைய தினம் ஒரு அபூர்வ நாள். எப்படி தெரியுங்களா. 10.10.2020. எப்படி. ஆண்டுகள் மனிதனின் வரலாற்றில் ஒரு வயதை கூட்டும். அதை கம்பீரமாக அனுபவிக்க இத்தகைய விசேட தினங்கள் அபூர்வமாக அமையும்.

தேதி 10 என்றாலே பத்துமடங்கு சூரியனின் மின்சக்தி பூமியில் உடைய நாள். அதோடு மாதமும் 10 என்றால் அந்த மின்காந்த அலைகள் பலமடங்கு அதிகரிக்கும். அதை சமப்படுத்தும் விதமாக ஆண்டு கணக்கில் 2020ல் சந்திரனின் மின்சக்தி வருகிறது. மொத்த கூட்டுத்தொகையில் சுக்கிரனின் ஆதிக்கம் வருகிறது.

சூரியனின் மின்காந்த அணைகளிலிருந்துதான் மனித உடலின் ஆக்கசக்தி,ஆன்ம சக்தி,கண் ஒளி பெறப்பட்டதாக செல்லப்படுகிறது. சனி என்ற கிரகத்தின் மின்சக்தி அதிகமாக உடைய நாளாகவும் இந்த தேதி அமைகிறது..

இப்படி சனி, சூரியன், சந்திரனின் மின்காந்த ஆற்றல்கள் ஒருங்கே அதிகரிக்கும் அதிசய நாள் இது. எண் 10 யஹோவா என்ற ய கார சிவத்தின் ஆகாய கோட்டை வாசல் திறக்கும். அப்படி திறக்கும் போது ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களின் உட்பொருளை தேவதைகள் நமக்கு படித்துச்சொல்லும்.

அப்படி அவர்கள் படிப்பதை கேட்டு பிரபஞ்ச ஞானத்தை நம்மால் அறிய முடியும். இந்த கோட்டை வாசலை ஒருவர் திறக்கும் போது அதன் வழியாக வேறு சில அசுர சக்திகளும் இங்கும் அங்கும் வந்து செல்ல முயற்சிக்கும். எண் 10க்கு இரண்டு வித பலன்கள் உண்டு.

முதல்பலனாக ஒன்று பிரபஞ்சத்தின் வாசலின்வழியே உள்ளே நுழைந்து நல்லதை அங்குள்ள சிவன் சொத்து என்ற உயர்ந்த ஞானத்தை தேடி அடைவது பின் அதை பூமியில் வாழும் நல்லோருக்கு பகிர்ந்து கொடுப்பது இது எண் 10.ன் நேர்மறை பலன் ஆகு‌ம்.

இரண்டாவது பலனாக இப்படி திறந்த இந்த பிரபஞ்ச வாசலின் வழியாக உள்ளே நுழைந்து அங்குள்ள சிவன் சொத்தை அபகரித்து . பின் அதை வைத்து பூமியில் உள்ளவர்களை தன் வசமாக்கி பூமியை ஆள நினைப்பது இது எண் 10 எதிர்மறைஎதிர்மறைபலனாகும். 10ம் தேதியில் பிறந்த சாமுவேல் ஹனிமன் அவர்கள் தான் கண்டறிந்த ஹோமியோபதி என்ற ஒப்பற்ற மருத்துவத்தின் மூலம் எண் 10 நேர்மறை பலனை இந்த உலகிற்கு மருத்துவ கொடையாக தந்தார்.

குலதெய்வ வழிபாடும் இஷ்ட தெய்வ வழிபாடும் இந்த அதிசய நாளின் பலன்களை அள்ளித்தரும்