இரு மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

கடலூர்:இன்று உள்ளூர் விடுமுறை .... புகழ்பெற்ற சிவாலய தலங்களில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதனை அடுத்து மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினத்தையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதையடுத்து விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 21 ஆம் தேதி பணிநாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதேபோன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில் இன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எனவே விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.