தஞ்சாவூரில் இன்று உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ...மன்னன் ராஜ ராஜ சோழனின் 1038 வது சதய விழா நேற்று தொடங்கியது. கடந்த 11-ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038- வது சதய விழா நேற்று தொடங்கும் நிலையில் சதய நட்சத்திர நாளான இன்று ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


எனவே இந்த விழாவையொட்டி பட்டிமன்றம், நாட்டியம் ,நாடகம் ,திருமுறை அரங்கம் ,கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மேலும் அத்துடன் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி சதயவிழா இன்று நடைபெறுகிறது. ஐப்பசி சதயவிழாவை முன்னிட்டு இன்று பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடக்கிறது. ஐப்பசி சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.