சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

சிவகங்கை : அக்.30 களுக்கு விடுமுறை ... இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் தமிழகத்தில் இருந்து சேவையாற்றிய முக்கிய தலைவர்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒருவர் ஆவார். இவரது தியாகம் மற்றும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாக்கள் சிறப்பிக்கப்படுகிறது.

இதனை அடுத்து நடப்பு ஆண்டு 116 ஆவது தேவர் பிறந்த நாள் மற்றும் 61வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 30-ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது.


எனவே இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் தேவரின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்த வருவார்கள். இதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து இந்த உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் மற்றொரு வேலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.